திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2866 to 2935 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 17. சூனிய சம்பாஷணை

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2866  to 2935

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


 ஒன்பதாம் தந்திரம்

 17.  சூனிய சம்பாஷணை



2866

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்

ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்

ஏய பெருமான்இருந்து பொருகின்ற

மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2867

    தூறு படர்ந்து கிடந்தது தூநெறி

மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை

மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு

ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2868

  ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்

சாறுபடுவன நான்கு பனையுள

ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை

ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2869

  வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தொழுதுகொண்டு ஓடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2870

 ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்

செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை

மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்

பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2871

  பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள

கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது

உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு

வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2872

 மூவணை ஏரும் உழுவது முக்காணி

தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்

நாஅணைகோலி நடுவில் செறுஉழார்

காலணை கோலிக்களர்உழு வாரே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2873

 ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள

மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்

பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்

கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2874

   பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள

குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள

குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்

பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2875

 ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள

ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்

காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து

மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2876

 தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்

மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது

வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்

தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2877

  அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி

திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி

வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்

விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2878

   இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்

கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை

மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்

கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2879

   விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது

விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்

விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு

விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2880

  களர்உழு வார்கள் கருத்தை அறியோம்

களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்

களர்உழு வார்கள் களரின் முளைத்த

வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2881

   கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து

ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு

நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை

ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2882

 மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ

உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்

முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2883

  பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2884

  ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்

தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்

தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன

மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2885

  எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்

தெருளாத கன்னி தெளிந்திருந்து ஓத

மலராத பூவின் மணத்தின் மதுவைப்

பிறவாத வண்டு மணமுண்ட வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2886

 போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி

ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2887

   மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு

வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்

பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி

வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2888

 பத்துப் பரும்புலி யானை பதினைந்து

வித்தகர் ஐவர் வினோகர் ஈரெண்மர்

அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்

அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2889

  இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்

இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்

இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2890

  ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்

பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்

முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்

நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2891

  கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்

கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2892

  குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்

நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்

உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்

புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2893

  காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி

கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்

மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்

மூடு புகாவிடின் மூவணை யாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2894

   கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்

காறையும் நாணும் வளையலும் கண்டவர்

பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்

ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2895

  துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்

விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்

வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2896

  பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்

திருந்திய மாதர் திருமணப் பட்டார்

பெருந்தவப் பூதம் போலுரு1 வாகும்

இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2897

  கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்

ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்

சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற

பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 2898

  இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை

தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்

குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்

தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2899

  அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்

மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்

தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2900

  கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்

காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்

காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்

கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2901

 கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்

கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2902

 பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்

குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்

கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட

பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2903

  கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்

எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே

வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது

கொல்லைசெய் நெஞ்சம் குறியறி யாதே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2904

  தட்டத்து நீரிலே தாமரை பூத்தது

குட்டத்து நீரில் குவளை எழுந்தது

விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்

குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 



2905

 ஆறு பறவைகள் ஐந்தகக்து உள்ளன

நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன

ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2906

   கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்

வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்

கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்

ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2907

   ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2908

   ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்

சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்

கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்

மால்இங்கன் வைத்தது முன்பின் வழியே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2909

   கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்

இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2910

  கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்

முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்

பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்

மறையொன்று கண்ட துருவம் பொன்னாமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2911

   கோரை எழுந்து கிடந்த குளத்தினில்

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது

நாரை படுகின்றாற் போலல்ல நாதனார்

பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2912

   கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்

எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி

எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு

ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2913

  உழவொன்று வித்து ஒருங்கின காலத்து

எழுமழை பெய்யாது இருநிலச் செவ்வி

தழுவி வினைசென்று தான்பய வாது

வழுவாது போவன் வளர்சடை யோனே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2914

  பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்

ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்

பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2915

  தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு

வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து

ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2916

 முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்

செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்

நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2917

 அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி

முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்

கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து

மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2918

    பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2919

  மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்

கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்

பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்

கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2920

  நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்

யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை

கூரும் மழைபொழி யாது பொழிபுனல்

தேரின் இந் நீர்மை திடரினில் லாதே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2921

 கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்

மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து

நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2922

   வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2923

  நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்

புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது

அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2924

  தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்

விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்

களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்

அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2925

 குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை

படைகண்டு மீண்டது பாதி வழியில்

உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்

அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2926

  போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டொடு நாலு புரவியும்

பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2927

  பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்

கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்

தூசி மறவன் துணைவழி எய்திடப்

பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2928

  கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு

கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு

வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள்

வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2929

   வீணையும் தண்டும் விரவி இசைமுரல்

தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது

வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்

காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 2930

  கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது

வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை

திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்

தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2931

  போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது

தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை

ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது

மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2932

   கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே

காமுற்று அகத்தி இடுவர் கடைதொறும்

வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி

யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2933

  தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்

மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் 

காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2934

  புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்

புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்

புலம்பின் அவளொடும் போகம் நுகரும்

புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 

 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


2935

   தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது

வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்

வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை

ஆணி கலங்கில் அதுஇது வாமே.  


 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments