திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2936 to 2953 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 18. மோன சமாதி

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2936  to 2953

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 18. மோன சமாதி 


2936

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை

சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்

மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு

சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2937

  காட்டும் குறியும் கடந்த வக்1 காரணம்

ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்

கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது

ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2938

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்

உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2939 

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்

பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்

சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்

உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2940

 துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி

அரிய துரியம் அதன்மீது மூன்றாய்

விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே

உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2941 

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி

திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்

பொருவிலி பூதப் படையுடை யாளி

மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2942 

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை

எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்

அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்

தொண்டர் முகந்த துறையறி யோமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2943

 தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல

நிட்களம் அல்ல சகள நிலையல்ல

அற்புத மாகி அனுபோகக் காமம்போல்

கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2944

 முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2945

 அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்

செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்

கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை

எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2946 

 கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்

தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை

பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்

கொண்டான் அறிவன் குணம்பல தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2947

  நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே

சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன

உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்

புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2948

  விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து

பதறு படாதே பழமறை பார்த்துக்

கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை

உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே . 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2949

 வாடா மலர்புனை சேவடி வானவர்

கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்

சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று

நாடார் அமுதுற நாடார் அமுதமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2950  

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்

பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்

சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண

மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2951

 தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு

ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

வானும் அழிந்து மனமும் அழிந்துபின்

நானும் அழிந்தமை நானறி யேனே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2952

  இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்

பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி

அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே

உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2953

 ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை

ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments