திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2954 to 2956 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 19. வரையுரை மாட்சி
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல்கள் - 2954 to 2956
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
ஒன்பதாம் தந்திரம்
19. வரையுரை மாட்சி
2954
தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண்ணாரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2955
உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
2956
மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
Comments
Post a Comment