திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2982 to 3025 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 21. தோத்திரம்

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2982  to 3025

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 21. தோத்திரம் 


2982

மாயனை நாடி மனநெடும் தேரேறிப்

போயின நாடறி யாதே புலம்புவர்

தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்

காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2983

  மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்

இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்

முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்

பன்னினர் என்றே பாடறி வீரே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2984

  முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை

எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை

அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்

பித்தன் இவனென்று பேசுகின் றாரே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2985

  புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி

புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்

புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்

புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2986

 பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2987 

 நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை

ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்

ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்

காமம் ஓர் ஆயிரம் கண்டொழிந் தாரே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2988

  போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்

போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2989

  நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை

ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்

வானோர் உலகம் வழிபட மீண்டபின்

தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2990

  வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்

இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்

சுந்தர மாதர் துழனியொன்று அல்லது

அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2991

  மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்

எண்ணிற் கலங்கி இறைவன் இவன்எனார்

உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்

தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2992

  மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்

கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்

சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



 2993

 அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்

சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை

புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி

வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2994 

 வள்ளல் தலைவனை வானநன் னாடனை

வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்

கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று

உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2995

 ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை

நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்

கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்

வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2996

  விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்

பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்

திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்

வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2997

  வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்

தானகம் இல்லாத் தனியாகும் போதகன்

கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்

பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2998

 விதியது மேலை அமரர் உறையும்

பதியது பாய்புனல் கங்கையும் உண்டு

துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்

பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2999 

 மேலது வானவர் கீழது மாதவர்

தானிடர் மானுடர் கீழது மாதனங்

கானது கூவிள மாலை கமழ்சடை

ஆனது செய்யும்எம் ஆருயிர் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3000

 சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை

ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி

யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்

வாழும் எழுத்தைந்து மன்னனும் ஆமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3001

  உலகமது ஒத்துமண் ஒத்து உயர் காற்றை

அலர்கதிர் அங்கிஒத்து ஆதிப் பிரானும்

நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்

செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3002 

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்

பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்

பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்

பரிசறிந்து அந்நிலம் பாரிக்குமாறே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3003

  அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்

பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்

தந்த உலகெங்கும் தானே பாராபரன்

வந்து படைக்கின்ற மாண்பது வாமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3004 

 முத்தண்ட ஈரண்ட மேமுடி ஆயினும்

அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்

அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி

மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3005 

 ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்

சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்

ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்

ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3006

 அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்

பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்

தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்

தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3007

  உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ

நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்

பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே

புலம்முழு பொன்னிற மாகிநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3008 

 பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்

பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்

தராபர னாய்நின்ற தன்மை யுணரார்

நிராபர னாகி நிறைந்துநின் றானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3009 

 போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை

ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்

வேற்றுடல் தானேன்றதுபெருந் தெய்வமாம்

காற்றது ஈசன் கலந்து நின்றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3010

  திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்

மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே

புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு

முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3011

  அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி

இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்

சிவன்தான் பலபல சீவனு மாகி

நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3012

  கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற

தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்

விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப

உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3013

 படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து

நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்

செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி

அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3014

 ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின

ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி

தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்

வாச மலர்போல் மருவி நின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3015

  இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை

நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்

தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3016

  உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்

கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்

வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்

அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3017

  மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்

கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்

ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்

வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3018  

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்

கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்

பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்

எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3019 

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்

நித்திலச் சோதியன் நீலக் கருமையன்

எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்

சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3020

  நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்

அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்

மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்

புறம்பல காணினும் போற்றகி லாரே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3021

  இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்

பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்

கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு

எங்குநின் றான்மழை போல்இறை தானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3022

  உணர்வது வாயுமே உத்தம மாயும்

உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்

புணர்வது வாயும் புல்லிய தாயும்

உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3023

  தன்வலி யால்உல கேழும் தரித்தவன்

தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்

தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்

தன்வலி யாலே தடம்கட லாமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 3024

 ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை

ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


3025

  பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்

குண்டாலம் காய்த்துக் குதிரை பழுத்தது

உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்

பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments