வானத்தில் திருநீறு வடிவத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்

நேற்று பிரம்மா பிரதிஷ்டை செய்து வணங்கிய சதிர்முக அதாவது நான்கு முக அமைப்பு கொண்ட சிவலிங்கத்தை பல ஆண்டுகாலம் வணங்கி தமக்கு இருந்த தோஷத்தை நிவர்த்தி செய்தார் என்ற வீடியோவை நான் அப்லோடு செய்துவிட்டு எமது வீட்டின் வெளியே வந்து அமர்ந்து எனது மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்... 


அப்பொழுது ஏதேச்சையாக பேச்சு சிவபெருமானை பற்றி இருந்தது எங்கள் இருவர் இடத்தில் அப்பொழுது விளையாட்டாக எனது மனைவியிடம் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள் என்று கூற அவள் என்னை பாத்து "இப்படித்தான் இறைவனை முதலில் வணங்கும் நபர்கள் பிறகு தங்களையே கடவுள் என்று நினைத்து வாழ்கிறார்கள் அந்த லிஸ்டில் நீங்களும் சேர்ந்து விட்டீர்களா"? என்று விளையாட்டாக கூற.. 

விளம்பரம் -

நான் சிரித்துக் கொண்டே ஆமாம் முதலில் சிவபெருமானை வணங்க வேண்டும் இறுதியில் சிவனாகவே மாற வேண்டும் என்றவாறு வானத்தை பார்க்கும் பொழுது என்ன ஒரு ஆச்சரியம் அங்கே மூன்று விரல்களால் நமது நெற்றியில் திருநீர் அணிவது போலவே ஒரு காட்சி  நீல வானத்தில் அற்புதமாக தெரிந்தது . 

அந்தக் காட்சியை பார்த்தவுடன் என் உடம்பெல்லாம் சிலிர்த்து போய்விட்டது சிவபெருமானே எங்களை பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது எங்களுக்கு கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு மேல் அந்த காட்சி மறையவே இல்லை மிக அற்புதமான அந்த காட்சியை சில நிமிடங்களுக்குப் பிறகு எமக்கு படம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 

விளம்பரம் -

அந்த கட்சியை படம் பிடித்து சோசியல் மீடியாவில் பதிவேற்றியும் விட்டேன் அந்த காட்சியை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வானத்தில் தெரிந்த சிவபெருமானின் திருநீற்றை பார்த்து அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். 

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏



Comments