குபேரன் வணங்கிய சிவலிங்கம் எங்கே உள்ளது தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்






நாம் வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு அவசியம் தேவையான ஒன்று செல்வம். அந்த செல்வத்தை நமக்கு கொடுப்பவர் குபேரர் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

பழம் கதைகளில் குபேரன் குசேலன் என்ற ஒரு கதை கூட புழக்கத்தில் உள்ளது. ஒருவனுக்கு குபேரரின் பார்வை மட்டும் பட்டு விட்டால்  அவன் வாழ்க்கையில் செல்வத்திற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது என்று புராணங்கள் கூறுகிறது. 

விளம்பரம் -

அப்பேர்ப்பட்ட குபேரன் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்கத்தை தீவிரமாக வணங்கி அந்த சிவலிங்கத்தின் அதாவது சிவபெருமானின் அருளை பெற்று அவரது பிரச்சினையை சரி செய்து இருக்கிறார்! என்றால்! அந்த அதாவது குபேரர் வணங்கிய அந்த சிவலிங்கத்தின் சக்தி எந்தளவு இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.... 

அப்படிப்பட்ட அபூர்வமான, அதிசயமான, அற்புதமான சக்திகள் நிறைந்த ஒரு சிவலிங்கம் தான் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் உள்ளது.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் உள்வளாகத்தில் அதாவது மூலவருக்கு பின்புறமாக இந்த குபேரர் வழங்கிய சிவலிங்கம் வைத்து  பூஜக்கப்படுகிறது....

குபேரரின் பிரச்சினையையே சரி செய்த இந்த சிவலிங்கம் நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யாத? என்ன? ஆகவே நம்பிக்கையுடன் சென்று இந்த சிவலிங்கத்தை வழிபடுங்கள்... வணங்குங்கள் உங்கள் வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...‌

விளம்பரம் -

இந்த சிவலிங்கம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் உள்ளது. 

உங்களுக்கு இந்த திருக்கோவிலுக்கு செல்லும் பெரும் பாக்கியம் கிடைத்தால் இந்த சிவலிங்கத்தை வணங்கி பயன்பெறுங்கள்.. 

இ கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு இல்லாதவர்கள் அல்லது உடனடியாக இந்த சிவலிங்கத்தை காண விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் குபேரர் வழங்கிய சிவலிங்கத்தின் வீடியோ தொகுப்பு கீழே உள்ள லிங்கில் கொடுத்துள்ளேன். 

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏





Comments